காஞ்சி, கோவிந்தவாடி ஏரி நிரம்பியதால், நாணல் புற்கள் மூழ்கியது. உயர்மின் கோபுர மின் கம்பங்களில் குஞ்சு பொரித்து வரும் நீர்க்கோழிகள். பிள்ளையைப் பெற்று வளர்த்து ஆளாக்குவதற்குள் எந்த தாய்க்கும் சிரமம் தான். 2வது படம்; தண்ணீரில் மூழ்குவதற்கு முன் காணப்பட்ட நாணல்.
யுகாதி பண்டிகையை முன்னிட்டு உடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவிலில் நடந்த திருக்கல்யாணத்தில் ஸ்ரீ ஜமதக்னி மகரிஷி ஸ்ரீ ரேணுகாதேவி அம்மன் திருமண கோலத்தில் அருள்பாலித்தனர்.
வசந்த காலத்தின் துவக்கத்தை யுகாதி புத்தாண்டாக ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடக மாநில மக்கள் கொண்டாடுகின்றனர். இனிய புத்தாண்டை பிராட்வேயில் உள்ள ஸ்ரீ கன்யகா பரமேஸ்வரி கல்லூரி மாணவியர் விளக்கேற்றி வரவேற்றனர்.
மேற்காசிய நாடான லெபனானின் பெய்ரூட் நகரில், இஸ்ரேல் ராணுவம் நடத்திய சரமாரி வான்வழி தாக்குதலில், 22 மாடி கட்டடம் ஒன்று படிப்படியாக நொறுங்கி விழுந்து தரைமட்டமானது..