சென்னையின் சில பகுதிகளில் ஆங்காங்கே விவசாயம் நடந்து கொண்டு தான் இருக்கிறது. சென்னை பல்லாவரம், கவுல்பஜார் பகுதியில் பயிரிடப்பட்டுள்ள மல்லிகைப் பூ செடிகளுக்கு மருந்து தெளித்த விவசாயி.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..