சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் ஊத்துக்கோட்டை பகுதியில் சாலையை ஆக்கிரமித்து கடைகள் வைக்கப்பட்டு உள்ளதால் ஏற்படும் நெரிசலால் மக்கள் தினமும் அவதிப்படுகின்றனர். ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற கலெக்டர் உத்தரவிட்டும் அதிகாரிகள் மெத்தனமாக உள்ளனர்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..