காஞ்சிபுரம் பழைய ரயி்ல் நிலையம் அருகில் சாலை சேதம் அடைந்து, மழைநீர் தேங்கும் நிலையில் இருந்தது. இது குறித்த செய்தி நம் நாளிதழில் வெளியானதை தொடர்ந்து சேதமான பகுதியில் மாநகராட்சி சார்பில் புதிதாக கான்கிரிட் சாலை அமைக்கப்பட்டது.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..