கோவையில் மோகன் பகவத்: நாமக்கல்லில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் இன்று விமானம் மூலம் கோவை வந்தார். கோவையில் இருந்து கார் மூலம் நாமக்கல் புறப்பட்டு சென்றார்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..