பாலைவனத்தில் மரங்களை பார்க்க முடியாது என்பதால் தற்போதே இலைகளை தின்று தன் பசியை போக்கிக் கொள்கிறதோ இந்த ஒட்டகம்!. தென்காசி மாவட்டம் கல்லூரணி பகுதியில் சர்க்கஸ் போடுவதற்காக அழைத்து வரப்பட்ட ஒட்டகம் புளிய மரத்தின் இலைகளைக் தின்று பசியை போக்கிகொள்கின்றது.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..