ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பாக நடந்த நிகழ்ச்சியில் , தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் சாமிநாதன் , விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கினார், உடன் கலெக்டர் லட்சுமி பவ்யா கலந்துக் கொண்டார்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..