கிரிவலம் முழுவதும் வெயிலில் செல்லும் பக்தர்கள் பாதம் சுடாமல் இருக்க முதல் கட்டமாக கிரிவலப்பாதை ஈசானிய மைதானத்திலிருந்து அவலூர்பேட்டை சாலை வரைக்கும் கூல் பெயிண்ட் அடிக்கும் பணியை தொடங்கிய நெடுஞ்சாலை துறை ஊழியர்கள். இடம்: திருவண்ணாமலை.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..