தூய்மையே சேவை கருத்துருவின் கீழ் காரமடை அருகே, மருதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தூய்மை குறித்து உறுதிமொழி வாசிக்கப்பட்டது. இதில் ஊராட்சி தலைவர் பூர்ணிமா ரங்கராஜ், துணை வட்டார வளர்ச்சி அலுவலர், செயலர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..