திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் அருகே மற்றும் கிரிவல பாதையில் பக்தர்களை வழி மறித்து இடையூறு செய்யக்கூடாது என திருநங்கைகளுக்கு அறிவுரை வழங்கிய கலெக்டர் பாஸ்கர பாண்டியன். உடன் சமூக நலத்துறை அலுவலர் சரண்யா உள்ளிட்டோர் இருந்தனர்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..