கோவை மாவட்டம், பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்., சனிப் பிரதோஷத்தையொட்டி, சாமி தரிசனம் செய்தார். கோவிலுக்கு, கன்றுடன் கூடிய பசுமாட்டை தானம் கொடுத்தார். தொடர்ந்து, உற்சவர் பல்லக்கை தூக்கி கோவிலை சுற்றி வலம் வந்தார்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..