சிவகங்கை மாவட்டம் இலுப்பக்குடி இந்தோ தீபெத் எல்லை பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் பயிற்சி முடித்த வீரர்களுக்கு வழி அனுப்பும் விழாவில் வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஐ.ஜி.நிர்பாய் சிங் மற்றும் டி.ஐ.ஜி. ஆச்சல் சர்மா ஏற்றுக் கொண்டனர்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..