சபாஷ் பயணிகளே...நீலகிரி மாவட்டம் ஊட்டியில் மழை பெய்து வரும் நிலையில் தொட்டபெட்டா டீகார்டன் அருகே கோத்தகிரி சாலையில் விழுந்த மரத்தை பஸ்களில் சென்ற பயணிகளே அகற்றியதால் உடனடியாக போக்குவரத்து சீரானது.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..