கோயம்பேடு பேருந்து நிலைய இடத்தில், பசுமை பூங்கா அமைக்க கோரி, பா.ம.க தலைவர் அன்புமணி , 10 லட்சம் கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்து பதாகைகளை ஏந்தி வலியுறுத்தினார். இடம் : எம்.எம்.டி.ஏ காலனி, அரும்பாக்கம்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..