திருப்பூர் கலெக்டர் அலுவலகத்திற்கு பெயிண்ட் அடிக்கும் பணி துவக்கப்பட்டு, லோக்சபா தேர்தல் அறிவித்ததால் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டது. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு பல மாதங்கள் முடிந்துள்ள நிலையிலும் பணிகள் துவக்கப்படாமல் உள்ளது.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..