மெட்ரோ ரயில் நிலையம் அமைப்பது குறித்து நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து ராயப்பேட்டை ஒயிட்ஸ் சாலை துர்க்கையம்மன் கோவில் நூழை வாயில் மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து தொழில்நுட்ப குழுவினர் ஆய்வு செய்தனர்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..