வைகாசி பிரமோற்சவத்தை முன்னிட்டு 25 அடி உயர திருத்தேரில் ஸ்ரீதேவி -பூதேவி சமேதராக உற்சவர் பவள வண்ண பெருமாள் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இடம்:காலடிப்பேட்டை, திருவொற்றியூர்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..