சென்னை அப்பல்லோ கேன்சர் சிறப்பு மருத்துவமனையில் துவங்கிய கருத்தரங்கை மருத்துவமனை துனண தலைவர் ப்ரீதா ரெட்டி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். இடமிருந்து டாக்டர்கள் சீனிவாசன்,ராகேஷ் ஜலால்,மது சசிதர், தினேஷ் மாதவன்,மினேஷ் மேத்தா,ஹர்ஷத் ரெட்டி, தயானந்த ஷர்மா
யுகாதி பண்டிகையை முன்னிட்டு உடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவிலில் நடந்த திருக்கல்யாணத்தில் ஸ்ரீ ஜமதக்னி மகரிஷி ஸ்ரீ ரேணுகாதேவி அம்மன் திருமண கோலத்தில் அருள்பாலித்தனர்.
வசந்த காலத்தின் துவக்கத்தை யுகாதி புத்தாண்டாக ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடக மாநில மக்கள் கொண்டாடுகின்றனர். இனிய புத்தாண்டை பிராட்வேயில் உள்ள ஸ்ரீ கன்யகா பரமேஸ்வரி கல்லூரி மாணவியர் விளக்கேற்றி வரவேற்றனர்.
மேற்காசிய நாடான லெபனானின் பெய்ரூட் நகரில், இஸ்ரேல் ராணுவம் நடத்திய சரமாரி வான்வழி தாக்குதலில், 22 மாடி கட்டடம் ஒன்று படிப்படியாக நொறுங்கி விழுந்து தரைமட்டமானது..