ஊட்டி செல்லும் சுற்றுலா பயணி வாகனங்கள் இ பாஸ் இருந்தால் மட்டும் அனுமதிக்கப்படும் என்ற நடைமுறை அமலுக்கு வந்தது. மேட்டுப்பாளையம் கல்லாறு அருகே நீலகிரி மாவட்ட கலெக்டர் அருணா வாகன ஓட்டுநர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..