பெரியகுளம் சோத்துப்பாறை ரோட்டில் வெள்ளரிக்காய் ஏற்றி சென்ற லோடு ஆட்டோ தீ பிடித்தது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். டிரைவர் சித்திக் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..