சித்ரா பவுர்ணமி முன்னிட்டு சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் உள்ள அருட்கோட்டம் முருகன் கோயிலில் பால்குடம், காவடி மற்றும் அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். இடம்:நேதாஜி நகர்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..