கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் மாவட்ட நிர்வாக சார்பில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொதுமக்கள் செல்போன் டார்ச் லைட்டை ஒளிர விட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..