மகளிர் திட்டம் சார்பில், மகளிர் சுய உதவிக்குழுக்கான கலாசார போட்டி திருப்பூர் எல். ஆர்.ஜி. அரசு கல்லூரி வளாகத்தில் நடந்தது. அதில் கயிறு இழுத்தல் போட்டியில் பங்கேற்றவர்கள்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..