பிரதமர் மோடி பங்கேற்கும் என் மண் என் மக்கள் யாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டம் திருப்பூர் மாவட்டம் பல்லடம் மாதப்பூரில் நடக்கிறது. பொது கூட்டத்திற்கு வந்த பொதுமக்களுக்கு வழங்குவதற்காக உணவு தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.
தேர்தல் கண்காணிப்பில் ஈடுபடும் பறக்கும் படை உள்ளிட்ட பல்வேறு அலுவலர்களுக்கு சி விஜில் மொபைல் ஆப் பயன்படுத்துவது குறித்து திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது.
விருத்தாசலம் அடுத்த புதுக்கூரைப்பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் தேர்தல் பொது பார்வையாளர் குகன் பூனம் தபஸ் ஆய்வு செய்தார். அருகில் ஆர்டிஓ விஷ்ணு பிரியா.