திருப்பூர் மாவட்ட ஊராட்சி கூட்டம், கூட்டரங்கில் நடந்தது. அதில் செயலர் தன்னிச்சையாக செயல்படுவதாக புகார் கூறி, தலைவர் சத்யபாமா வெளிநடப்பு செய்தார். அருகில் செயலர் முரளி கண்ணன்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..