புதுச்சேரி முத்திரையார்பாளையம் இளங்கோ அடிகள் அரசு மேல்நிலைப்பள்ளியில் புத்தகப் பை இல்லாத தினம் கொண்டாடப்பட்டது. இதில் மின்னலினால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..