பொள்ளாச்சி என்.ஜி.எம்., கல்லூரியில் தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் மாணவர்களுக்கான பயிற்சி முகாம் நடந்தது. அதில், மாணவர்களுக்கு விதை பந்து தயாரிப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..