sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

மோடிக்கு வாழ்த்து சொல்லாதது ஏன்? பாக்., விளக்கம்

/

மோடிக்கு வாழ்த்து சொல்லாதது ஏன்? பாக்., விளக்கம்

மோடிக்கு வாழ்த்து சொல்லாதது ஏன்? பாக்., விளக்கம்

மோடிக்கு வாழ்த்து சொல்லாதது ஏன்? பாக்., விளக்கம்

18


ADDED : ஜூன் 08, 2024 01:23 PM

Google News

ADDED : ஜூன் 08, 2024 01:23 PM

18


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இஸ்லாமாபாத்: இந்திய பிரதமர் ஆக மீண்டும் பதவியேற்க உள்ள நரேந்திர மோடிக்கு வாழ்த்து சொல்லாதது ஏன் என்பதற்கு பாகிஸ்தான் விளக்கம் அளித்து உள்ளது.

பிரதமர் ஆக பதவியேற்க உள்ள பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு மோடி நன்றி தெரிவித்துள்ளார். ஆனால், பாகிஸ்தான் இதுவரை வாழ்த்து சொல்லவில்லை.

இந்நிலையில் இஸ்லாமாபாத்தில் நிருபர்களை சந்தித்த பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மும்தாஜ் ஜாக்ராவிடம், மோடிக்கு பாகிஸ்தான் சார்பில் வாழ்த்து சொல்லப்பட்டதா என கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு அவர் அளித்த பதில்: தங்களது தலைவரை தேர்வு செய்யும் உரிமை இந்திய மக்களுக்கு உள்ளது. இந்தியாவின் தேர்தல் நடைமுறைகள் குறித்து எந்த கருத்தும் கூற முடியாது. புதிய அரசு பதவியேற்காததால் இந்திய பிரதமருக்கு வாழ்த்து தெரிவிப்பது குறித்து பேசுவது முதிர்ச்சியற்றது.

இந்தியா உள்ளிட்ட அனைத்து நட்பு நாடுகளுடன் நட்பையே பாகிஸ்தான் விரும்புகிறது. காஷ்மீர் உள்ளிட்ட அனைத்து பிரச்னைகள் குறித்தும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண விரும்புகிறது. இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us