sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

லெபனான் முழுவதும் பேஜர்கள் வெடித்து ஒன்பது பேர் பலி : 2,700 பேர் காயம்:

/

லெபனான் முழுவதும் பேஜர்கள் வெடித்து ஒன்பது பேர் பலி : 2,700 பேர் காயம்:

லெபனான் முழுவதும் பேஜர்கள் வெடித்து ஒன்பது பேர் பலி : 2,700 பேர் காயம்:

லெபனான் முழுவதும் பேஜர்கள் வெடித்து ஒன்பது பேர் பலி : 2,700 பேர் காயம்:

14


UPDATED : செப் 17, 2024 10:43 PM

ADDED : செப் 17, 2024 08:36 PM

Google News

UPDATED : செப் 17, 2024 10:43 PM ADDED : செப் 17, 2024 08:36 PM

14


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெய்ரூட்: லெபனானில் கையடக்க கருவியான பேஜர்கள் வெடித்ததில் லெபனான் எம்.பி மகன் உட்பட ஒன்பது பேர் பலியாயினர். 2,700க்கும் மேற்பட்டோர் காயம்அடைந்தனர். சம்பவத்திற்கு இஸ்ரேல் தான் காரணம் என ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவினர் குற்றம் சாட்டி உள்ளனர்.

லெபனான் நாட்டில் இஸ்ரேலுக்கு எதிராக ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவினர் தகவல் தொடர்புக்காக கையடக்க கருவியாக பேஜர்களை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தெற்கு லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் அல்-ஷஹ்ரா மருத்துவமனையில் பலர் வைத்திருந்த கையடக்க பேஜர்கள் வெடித்தது, இதை தொடர்ந்து பேஜர்களை பயன்படுத்தும் ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவினர் வைத்திருந்த பேஜர்களும் தொடர்ச்சியாக வெடித்தன. இதில் ஹிஸ்புல்லா அமைப்பினர் மற்றும் மருத்துவர்கள் என 2,700 பேர் காயமடைந்ததாகவும் ஒன்பது பேர் பலியாகி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்தாண்டு அக்டோபர் முதல் ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலுடன் போர் நடத்திவரும் நிலையில் இன்று (செப்.,17) நடந்த சம்பவம் மிகப்பெரிய பாதுகாப்பு விதிமீறல் என ஹிஸ்புல்லா குற்றம்சாட்டியுள்ளது.

பேஜர்கள் வைத்திருப்பவர்கள் உடனடியாக வெளியே வீசி எறிய வேண்டும். எனவும் அதனை பயன்படுத்த வேண்டாம் என வும் அறிவித்து நாடு முழுவதும் அவசர நிலையை லெபனான் நாடு அறிவித்து உள்ளது.

இந்த வெடிவிபத்தில் ஈரான் தூதர் முஜூதாபாஅமானி என்பவர் காயமடைந்ததாகவும் லெபனான் எம்.பி.,மகன் பலியாகி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.






      Dinamalar
      Follow us