sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

அவமானப்படுத்திய இடைக்கால அரசு; வங்கதேச அதிபர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு

/

அவமானப்படுத்திய இடைக்கால அரசு; வங்கதேச அதிபர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு

அவமானப்படுத்திய இடைக்கால அரசு; வங்கதேச அதிபர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு

அவமானப்படுத்திய இடைக்கால அரசு; வங்கதேச அதிபர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு

5


ADDED : டிச 12, 2025 09:06 AM

Google News

5

ADDED : டிச 12, 2025 09:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டாக்கா: வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு தன்னை அவமானப்படுத்தியதாகக் கூறி, அந்நாட்டின் அதிபர் முகமது ஷஹாபுதீன் தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார்.

வங்கதேசத்தில் 2026ம் ஆண்டு பிப்ரவரியில் தேர்தல் நடைபெறும் என்று அந்நாட்டின் தேர்தல் கமிஷன் அறிவித்து இருக்கிறது. எனவே, அரசு நிர்வாகத்தை வழிநடத்தி வரும் தற்போதைய இடைக்கால அரசில் பதவி வகிப்பவர்கள் வரும் தேர்தலில் போட்டியிட முடியாது. இதனால், இடைக்கால அரசியல் பதவியில் இருப்பவர்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு, தன்னை அவமானப்படுத்தியதாகவும், ஓரங்கட்டியதாகவும் வங்கதேச அதிபர் முகமது ஷஹாபுதீன் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், தான் பதவியில் இருந்து விலகப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது; நான் இனி பதவியில் நீடிக்க விரும்பவில்லை. இந்தப் பதவியில் இருந்து வெளியேற நான் ஆர்வமாக இருக்கிறேன். தேர்தல் வரை மட்டுமே இந்தப் பதவியில் நீடிப்பேன். அரசியலமைப்பு மூலம் அமைந்த அதிபர் பதவி என்பதால், தேர்தல் வரை பொறுப்பை வகிக்க வேண்டும் என்ற முடிவை எடுத்துள்ளேன். யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசால் நான் ஓரங்கப்பட்டுள்ளேன்.

கடந்த 7 மாதங்களாக முகமது யூனுஸ் என்னை சந்திக்கவில்லை. அதிபருக்கான செய்தித் தொடர்புத்துறை நீக்கப்பட்டுள்ளது. உலகெங்கும் உள்ள வங்கதேச தூதரங்கள் மற்றும் துணை தூதரங்களில் வைக்கப்பட்டிருந்த என்னுடைய புகைப்படங்கள் நீக்கப்பட்டுள்ளன. இதனால், அதிபர் நீக்கப்பட போகிறாரோ என்ற சந்தேகம் மக்களுக்கு எழுந்தது. இதனால், நான் அவமானப்படுத்தப்பட்டுள்ளேன். இது தொடர்பாக இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸூக்கு கடிதம் எழுதினேன். ஆனால், எந்த பதிலும் வரவில்லை. என்னுடைய குரலை ஒடுக்கப்பார்க்கிறார்கள், இவ்வாறு அவர் கூறினார்.

வங்கதேச தேர்தலில் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்கு, முகமது யூனுஸ் அரசு தடை விதித்துள்ளது. இதனால், அக்கட்சியால் தேர்தலில் போட்டியிட முடியாது. இதையடுத்து மற்றொரு முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் வங்கதேச தேசியவாத கட்சி, ஜமாத் - இ - இஸ்லாமி கட்சி இடையே இந்த தேர்தலில் போட்டி நிலவுகிறது.






      Dinamalar
      Follow us