ADDED : ஆக 07, 2024 07:55 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காத்மாண்டு: நேபாளில் தனியார் ஹெலிகாப்டர் மலை மீது மோதிய விபத்திற்குள்ளானதில் அதில் பயணித்த 5 பேர் பலியாயினர்.
நேபாளின் காத்மாண்டு சர்வதேச விமான நிலையத்திலிருந்து இரோகாப்டர் ஏஎஸ்.350 என்ற தனியார் ஹெ லிகாப்டர் நான்கு ஆண், ஒரு பெண் என 5 பேருடன் புறப்பட்டு வடகிழக்கு காத்மாண்டுவின் நெளவா கோட் மாவட்டத்தின் சூரியசெளர் என்ற இடத்தில் மலை மீது மோதி விபத்திற்குள்ளானது,
இதில் ஹெலிகாப்டர் கீழ விழுந்து நொறுங்கியதில் 5 பேரும் பலியாயினர். இவர்கள் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் எனவும் கூறப்படுகிறது. தகவலறிந்த ராணுவம், மற்றும் மீட்பு படையினர் சேதமடைந்த ஹெலிகாப்டரிலிருந்து 5 உடல்களையும் மீட்டனர்.

