ADDED : அக் 28, 2024 12:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தமிழக பள்ளிகளில், 13 ஆண்டுகளாக, பகுதி நேர ஆசிரியர்களாக, 12,000 பேர் பணிபுரிகின்றனர். அவர்களுக்கு மாதம், 12,500 ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. இந்த மாத சம்பளத்தை, தீபாவளிக்கு முன் வழங்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.
அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றும்படி, அரசியல் தலைவர்கள் சிலரும் அரசை வலியுறுத்தி உள்ளனர். அதனால், தீபாவளியை கொண்டாட, பகுதி நேர ஆசிரியர்கள் அரசின் முடிவை எதிர்நோக்கி உள்ளனர்.

