sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஆரஞ்சு என்ன, ஆப்பிள் அலர்ட் போட்டாலும் செம்பரம்பாக்கம் தாங்கும்; துரைமுருகன்

/

ஆரஞ்சு என்ன, ஆப்பிள் அலர்ட் போட்டாலும் செம்பரம்பாக்கம் தாங்கும்; துரைமுருகன்

ஆரஞ்சு என்ன, ஆப்பிள் அலர்ட் போட்டாலும் செம்பரம்பாக்கம் தாங்கும்; துரைமுருகன்

ஆரஞ்சு என்ன, ஆப்பிள் அலர்ட் போட்டாலும் செம்பரம்பாக்கம் தாங்கும்; துரைமுருகன்

18


ADDED : டிச 16, 2024 02:46 PM

Google News

ADDED : டிச 16, 2024 02:46 PM

18


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ஆரஞ்சு போட்டாலும் சரி, ஆப்பிள் போட்டாலும் சரி செம்பரம்பாக்கம் ஏரி தாங்கும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

செம்பரம்பாக்கம் ஏரியில் அமைச்சர்கள் துரைமுருகன், தா.மோ.அன்பரசன் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். பின்னர் அமைச்சர் துரைமுருகன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: செம்பரம்பாக்கம் ஏரியில் கழிவுநீர் கலக்கப்படுகிறது என்று சொன்னதற்கு தான் நாட்டில் உள்ள பலருக்கு கோபம் வருகிறது. பொதுவாகவே நமது சமுதாயத்தில் ஒரு பிரச்னை இருக்கிறது. குப்பைகள் போன்ற எதுவாகினும், அதை ஏரியில் தான் கொட்டுகிறார்கள். ஆம்பூர், வாணியம்பாடி பகுதியில் குப்பைகளை கொட்டி கொட்டி, பாலாறே மிகவும் மோசமாகிவிட்டது. ஆகையால், மக்களுக்கு அந்த விழிப்புணர்வு வர வேண்டும்.



குப்பைகளை அள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வை கொண்டு வந்துவிட்டார்கள். ஆனால், அந்த குப்பைகளை எங்கே கொட்ட வேண்டும் என்பதை மட்டும் சொல்லாமல் விட்டுவிட்டார்கள். அதனால், செம்பரம்பாக்கம் போன்ற ஏரிகளில் மக்கள் குப்பைகளை கொட்டக் கூடாது. மழை இல்லை என்று யார் சொன்னது. ஆரஞ்சு போட்டாலும் சரி, ஆப்பிள் போட்டாலும் சரி செம்பரம்பாக்கம் ஏரி தாங்கும். எந்த குறையும் நான் சொல்ல விரும்பவில்லை குறைகள் இருந்தால் நிவர்த்தி செய்யப்படும்.

அ.தி.மு.க., எங்களை பாராட்டியா தீர்மானம் போடுவார்கள்? அப்படிப் போட்டால் தான் எதிர்க்கட்சி. அப்படி போட வில்லை என்றால் நானே கேட்பேன்.. என்ன எதிர்க்கட்சி என்று? நீர்வளத் துறைக்கு மட்டும் நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட ஏரிகள் உள்ளது. ஒரு பக்கம் தூர்வாரினால் ஒரு பக்கம் நின்று விடுகிறது. எல்லாவற்றையும் தூர்வார நிதி ஆதாரம் கொடுக்கவில்லை, கேட்டு கொண்டு இருக்கிறோம். அனைத்தையும் தூர்வாருவது ஒரே நேரத்தில் முடியாத காரியம். இவ்வாறு துரைமுருகன் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us