sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'வேண்டும் மோடி; மீண்டும் மோடி' வாசகத்துடன் மெகா பலுான்

/

'வேண்டும் மோடி; மீண்டும் மோடி' வாசகத்துடன் மெகா பலுான்

'வேண்டும் மோடி; மீண்டும் மோடி' வாசகத்துடன் மெகா பலுான்

'வேண்டும் மோடி; மீண்டும் மோடி' வாசகத்துடன் மெகா பலுான்


ADDED : பிப் 20, 2024 01:46 AM

Google News

ADDED : பிப் 20, 2024 01:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:திருப்பூரில் நடைபெற உள்ள, 'என் மண்; என் மக்கள்' பாதயாத்திரை நிறைவு மற்றும் பிரதமர் மோடி வருகை குறித்து, பலுான் பறக்க விடுவது உள்ளிட்ட பல்வேறு வகையில் பா.ஜ.,வினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை திருப்பூரில், 'என் மண்; என் மக்கள்' யாத்திரையை நிறைவு செய்ய உள்ளார்.

பல்லடத்தில் இதன் நிறைவு விழாவையொட்டி பிரம்மாண்டமாக நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசுகிறார். பொதுக்கூட்ட ஏற்பாடுகளில், பா.ஜ.,வினர் மும்முரமாக பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பல்வேறு பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பூர் வடக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட, வடக்கு, தெற்கு, பல்லடம் ஆகிய தொகுதிகளில், 19 மண்டலங்களில் வாகன பிரசாரம் செய்து, நோட்டீஸ்களை வழங்கினர்.

நேற்று மாலை மங்கலம் ரோடு குமரன் கல்லுாரி அருகே பெரிய பொம்மைகளை காட்சிப்படுத்தி, மாநாடு குறித்து விழிப்புணர்வு நோட்டீஸ்களை மக்களிடம் வழங்கி அழைத்தனர். மத்திய பஸ் ஸ்டாண்ட் அருகே பெரியளவில் ராட்சத பலுான் ஒன்றை பறக்க விட்டுள்ளனர். அதில், 'வேண்டும் மோடி; மீண்டும் மோடி' என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.






      Dinamalar
      Follow us