ஈரோடு விஜய் பிரசார கூட்டத்தில் ஏராளமான தொண்டர்கள் பங்கேற்பு
ஈரோடு விஜய் பிரசார கூட்டத்தில் ஏராளமான தொண்டர்கள் பங்கேற்பு
UPDATED : டிச 18, 2025 12:42 PM
ADDED : டிச 18, 2025 07:55 AM

ஈரோடு: ஈரோட்டில் தவெக தலைவர் விஜய் நடத்திய பிரசார கூட்டத்தில் ஏராளமான தொண்டர்கள் பங்கேற்றனர்.
ஈரோடு மாவட்டம், விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே, சரளை கிராமத்தில்,
ஹிந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள விஜயபுரி அம்மன் கோவிலுக்கு
சொந்தமான இடத்தில் நடந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய் பங்கேற்றார். கொங்கு மண்டலத்தில் முதல்முறையாக, ஈரோட்டில் விஜய் நடத்திய மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி என்பதால் தொண்டர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அவர்கள் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
நல்லவர், வல்லவர்
முதலில் பிரசார கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செ ங்கோட்டையன் பேசியதாவது: கூட்டத்தை பார்க்கும் போது நாளைய தமிழகத்தின் முதல்வர் இவர் தான் என வரலாறு படைக்கும் என்பது போல் உள்ளது. நாளை தமிழகத்தை ஆளப்போவது விஜய் தான். நல்ல தலைவர் தேவை எனும் மக்களின் கனவு நனவாகி உள்ளது.
ரூ.500 கோடி வருவாய்
விஜய் நல்லவர், வல்லவர், உங்களுக்காகவே வாழ்பவர். ஆண்டுக்கு ரூ.500 கோடி வருவாயை விட்டு விட்டு மக்களுக்காக வந்திருக்கிறார்; இதற்கு முன் புரட்சித்தலைவரைப் பார்த்தேன்; இன்றைக்கு விஜயை காண்கிறேன். இவ்வாறு செங்கோட்டையன் பேசினார். கூட்டம் நடந்த இடத்திற்கு தவெக தொண்டர்கள் இன்று அதிகாலை முதலே குவிந்தனர். அவர்கள் விஜய் கூட்டம் நடந்த இடத்திற்கு பிரசார வாகனத்தில் வந்த உடன் உற்சாகம் அடைந்தனர்.

