ADDED : பிப் 21, 2024 06:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அமைச்சர் உதயநிதி, நான்காவது வரிசையில் அமர்ந்து, வேளாண் பட்ஜெட் உரையை கவனித்தார்.
சட்டசபையில், மூத்த அமைச்சர்களுடன், முதல் வரிசையில் உதயநிதிக்கு இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர் முதல் வரிசையில் அமர்வதை பெரும்பாலும் தவிர்த்து வருகிறார்.
வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம், நேற்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்தார். அப்போது அமைச்சர்கள் உதயநிதி, ராஜா ஆகியோர், நான்காவது வரிசையில் உள்ள இருக்கையில் அமர்ந்து கவனித்தனர்.
பட்ஜெட் உரை முடிவதற்கு, அரை மணி நேரம் முன்பாக உதயநிதி சென்றார். அதன்பின், ராஜா இரண்டாவது வரிசையில் உள்ள தன் இருக்கைக்கு வந்தார்.

