sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

எள்ளுக்கு பதில் ஓமம் சேர்த்து பாருங்களேன்!

/

எள்ளுக்கு பதில் ஓமம் சேர்த்து பாருங்களேன்!

எள்ளுக்கு பதில் ஓமம் சேர்த்து பாருங்களேன்!

எள்ளுக்கு பதில் ஓமம் சேர்த்து பாருங்களேன்!


ADDED : அக் 25, 2024 12:43 AM

Google News

ADDED : அக் 25, 2024 12:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* தீபாவளிக்கான செலவு, வாங்க வேண்டிய துணிமணி, பொருட்கள் முதலியவற்றை பட்டியல் போட்டுக் கொள்ளுங்கள்; வருமானத்தை கணக்கிட்டு அதற்கேற்பஅவசியமான செலவுகளை மேற்கொள்ளுங்கள்

* வேலைகளை நாமே இழுத்துப்போட்டு செய்வதைவிட, குடும்ப உறுப்பினர்கள்மற்றும் குழந்தைகளை பங்கேற்க செய்தால், அவர்களுக்கும் மகிழ்ச்சி பிறக்கும்

* தீபாவளிக்கு சில நாட்கள் முன்பாகவே, பலகாரங்கள்செய்யத் தேவையான மூலப் பொருட்களை தயார் செய்து கொள்ளுங்கள்

* பாதுகாப்பான பட்டாசுகளை, தரம் பார்த்து குழந்தைகளுக்கு வாங்கிக்கொடுங்கள்; காசை கரியாக்கும் விஷயமாக இருந்தாலும் கவனம் அவசியம்.

* மாவை வறுத்து, பலகாரம் செய்தால், பலகாரங்கள் மொறுமொறுவென்று இருக்கும்

* பலகாரங்கள் செய்யும்போது, எண்ணெய் பொங்கி வழிவதை த்தவிர்க்க, இரண்டு கொய்யா இலை,இஞ்சி துண்டு, சிறிதளவு புளி இவற்றில் ஏதேனும் ஒன்றை காயும் எண்ணெயில்போடலாம்

* எந்தவிதமான பலகாரமாக இருந்தாலும், மாவில் சிறிது எண்ணெய் ஊற்றி பிசைந்தால், அதிக எண்ணெய் குடிக்காது

* தேன்குழல் செய்யும்போது, உருளைக் கிழங்கை வேகவைத்து சேர்த்தால்,சுவையும், மொறு மொறுப்பும் கூடும்

* சீடை, முறுக்கு, தட்டை எது செய்தாலும், மாவில் இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெய், தேங்காய் பால் கலந்தால், சுவையும்,மணமும் அதிகரிக்கும்

* சீடை மாவில், உப்பு கரைத்த தண்ணீர் விட்டு பிசைந்தால், சீடை வெடிக்காது; அதேநேரம் எண்ணெய் ரொம்பவும் காயக்கூடாது

* பச்சரிசியை ஊற வைத்து, தண்ணீரை வடித்து, மாவாக்கி, வறுத்து சீடை செய்தால் வெடிக்காது

* பொட்டுக்கடலை பொடியில் இனிப்புகள் செய்தால், சுவையாக இருப்பதுடன், சீக்கிரமும் செய்யலாம். நெய்யும், சர்க்கரையும் குறைவாக சேர்க்கவும்.

* முள்ளு முறுக்கு செய்யும்போது, எள்ளுக்கு பதிலாக ஓமம் சேர்த்தால், மணமாக இருக்கும்; ஜீரணமும் ஆகும்

* ஓமப்பொடி செய்யும்போது,ஓமத்தை தண்ணீரில் ஊற வைத்து, அரைத்து, வடிகட்டி மாவில் போட்டு பிசையலாம். ஓமத்தை வறுத்து, பொடித்தும் மாவில் சேர்க்கலாம்

* வெண்ணெய், துாள் உப்பு இரண்டையும் முறுக்கு மாவில் சேர்த்து பிசைந்தால், மாவு நல்ல பதமாக இருக்கும்

* ரிப்பன் பேடாவுக்கு அரிசி மாவு, கடலை மாவுடன் சிறிதளவு உளுந்த மாவையும் சேர்த்தால் எண்ணெய் அதிகம் குடிக்காது; கரகரப்பு கூடும்

* கடலை உருண்டை செய்யும்போது, வெல்லப் பாகுடன் சர்க்கரை சிறிது சேர்த்தால் சுவை கூடும்; கரகரவென்று இருக்கும்

அப்புறம் என்ன... பிள்ளைகள் பட்டாசை சுட்டுத் தள்ளட்டும்; நீங்கள் பலகாரங்களை சுட்டுத் தள்ளுங்கள்!

நவராத்திரி பண்டிகையை விமரிசையாக கொண்டாடிய மக்கள், அடுத்த கட்டமாகதீபாவளியை கொண்டாட ஆர்வம் காட்டி வருகின்றனர். நம் கலாசாரத்தில் முக்கிய அங்கம் வகிக்கிறது இந்த தீபாவளி பண்டிகை. அவற்றை சிறப்பாக கொண்டாட, வாசகர்களுக்கு சில அவசியமான டிப்ஸ்...






      Dinamalar
      Follow us