தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/தமிழகம்/ தொடர்ந்து இரவு பணி ரயில் ஓட்டுநர்கள் அவதி

 தொடர்ந்து இரவு பணி ரயில் ஓட்டுநர்கள் அவதி

 தொடர்ந்து இரவு பணி ரயில் ஓட்டுநர்கள் அவதி


ADDED : டிச 09, 2025 05:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 09, 2025 05:18 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: ரயில்வேயில் நாடு முழுதும், 50,000க்கும் மேற்பட்டோர், ரயில் ஓட்டுநர்களாகப் பணியாற்றி வருகின்றனர். காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாததால், தொடர் இரவு பணி, கூடுதல் பணிச்சுமை போன்றவற்றால், ரயில் ஓட்டுநர்கள் பாதிக்கப் பட்டுள்ளனர்.

எனவே, எட்டு மணி நேரம் பணி என்பதை உறுதி செய்ய வேண்டும். தொடர் இரவு பணியை தவிர்க்க வேண்டும். அனைத்து ரயில் இன்ஜின்களிலும், கழிப்பறை வசதி ஏற்படுத்த வேண்டும் என, ரயில் ஓட்டுநர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து, ரயில் ஓட்டுநர்கள் கூறுகையில், 'ரயில் ஓட்டுநர்கள் தற்போது 12 மணி நேரத்துக்கு மேலாக பணிபுரிய வேண்டிய நிலை உள்ளது. தொடர்ந்து, நான்கு இரவு பணிகள் வழங்கப்படுகின்றன. இதனால், ஓட்டுநர்கள் சோர்ந்து போகின்றனர். இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகிறோம்' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us