sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வரிசையில் நின்றபோது கடித்து குதறிய நாய்: திருச்செந்துாரில் பக்தருக்கு நேர்ந்த சோகம்

/

வரிசையில் நின்றபோது கடித்து குதறிய நாய்: திருச்செந்துாரில் பக்தருக்கு நேர்ந்த சோகம்

வரிசையில் நின்றபோது கடித்து குதறிய நாய்: திருச்செந்துாரில் பக்தருக்கு நேர்ந்த சோகம்

வரிசையில் நின்றபோது கடித்து குதறிய நாய்: திருச்செந்துாரில் பக்தருக்கு நேர்ந்த சோகம்

2


ADDED : நவ 09, 2025 08:25 PM

Google News

2

ADDED : நவ 09, 2025 08:25 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துாத்துக்குடி : திருச்செந்துார் முருகன் கோவிலில் தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்த பக்தரை நாய் கடித்து குதறியதால் அவரது காலில் ரத்தம் கொட்டியது. அந்த பக்தர் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் தாலுகா, டாணா பகுதியை சேர்ந்த முத்துராமன், 60, நேற்று அதிகாலை, 4:00 மணியளவில் திருச்செந்துார் முருகன் கோவிலுக்கு சென்றார். விஸ்வரூப தரிசனம் செய்வதற்காக, 100 ரூபாய் கட்டண வரிசையில் அவர் காத்திருந்தார்.நீண்ட நேரமாக தரிசனம் செய்வதற்கு முத்துராமன் காத்திருந்ததால் ஆங்காங்கே கீழே அமர்ந்து சென்றுள்ளார். உட்பிரகாரத்தில் அவர் வரிசையில் சென்று கொண்டிருந்த போது, அங்கு படுத்திருந்த நாய் ஒன்று திடீரென முத்துராமனை காலில் கடித்துள்ளது.

ரத்தம் கொட்டியதால் கோவில் பணியாளர்கள் அவரை மீட்டு, திருச்செந்துார் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, தடுப்பூசி போடப்பட்டது. அடுத்த 8 மணி நேரத்திற்குள் மீண்டும் தடுப்பூசி போட வேண்டும் என, டாக்டர்கள் கூறியதால் உடனடியாக அவர் அங்கிருந்து சொந்த ஊரான டாணாவிற்கு சென்றுள்ளார்.

அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு சென்ற முத்துராமனை, ஊசி போட்ட பின் டாக்டர்கள் உள்நோயாளியாக அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். தமிழகம் முழுதும் ரேபிஸ் பிரச்னை இருந்து வரும் நிலையில், அவருக்கு கூடுதலாக சிகிச்சை அளிக்க வேண்டும் என, டாக்டர்கள் அறிவுரை வழங்கி உள்ளனர்.

திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவில் உட்பிரகாரத்தில் தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்த பக்தர் ஒருவரை நாய் கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக, கோவில் நிர்வாகம் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.






      Dinamalar
      Follow us