sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 11, 2025 ,கார்த்திகை 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கொள்ளை முயற்சியை தடுத்ததால் விபரீதம் கோவில் காவலாளிகள் 2 பேர் வெட்டிக்கொலை

/

கொள்ளை முயற்சியை தடுத்ததால் விபரீதம் கோவில் காவலாளிகள் 2 பேர் வெட்டிக்கொலை

கொள்ளை முயற்சியை தடுத்ததால் விபரீதம் கோவில் காவலாளிகள் 2 பேர் வெட்டிக்கொலை

கொள்ளை முயற்சியை தடுத்ததால் விபரீதம் கோவில் காவலாளிகள் 2 பேர் வெட்டிக்கொலை

2


UPDATED : நவ 12, 2025 11:39 AM

ADDED : நவ 12, 2025 01:53 AM

Google News

UPDATED : நவ 12, 2025 11:39 AM ADDED : நவ 12, 2025 01:53 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே நள்ளிரவில், கோவிலில் நடந்த கொள்ளை முயற்சியை தடுத்த இரு காவலாளிகள் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள தேவதானத்தில், சேத்துார் ஜமீனுக்கு பாத்தியப்பட்ட பிரசித்தி பெற்ற நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோவில் உள்ளது. நுாற்றாண்டு பழமை வாய்ந்த இக்கோவில், தென்பாண்டி நாட்டு பஞ்சபூத தலங்களில் ஆகாயமாக போற்றப் படுகிறது. ஹிந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்திற்கு உட்பட்ட இக்கோவிலில், அப்பகுதியைச் சேர்ந்த பேச்சிமுத்து, 50, சங்கரபாண்டியன், 65, ஆகியோர் நேற்று முன் தினம், இரவு காவலாளிகளாக பணி புரிந்தனர்.

பகல் நேர காவலாளி மாடசாமி, 65, நேற்று காலை 6:45 மணிக்கு கோவிலுக்கு சென்ற போது, இரவு காவலாளிகள் இருவரும் கழுத்து, கை, கால் உள்ளிட்ட பல இடங்களில் வெட்டப்பட்ட நிலையில், படுகொலை செய்யப்பட்டு கிடந்தனர். கோவிலுக்குள் இருந்த, 'சிசிடிவி கேமரா'க்கள் சேதப்படுத்தப்பட்டு, கேமரா பதிவு டி.வி.ஆர்., கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது; உண்டியல் உடைக்கப்பட்டிருந்தது.

இது குறித்து போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. டி.ஐ.ஜி., அபினவ்குமார் தலைமையில், எஸ்.பி., கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர். தடயவியல் நிபுணர்கள் கோவிலில் இருந்த தடயங்களை சேகரித்தனர். மோப்ப நாய் ஆதன் வரவழைக்கப்பட்டு, கோவில் தெப்பம் அருகே உள்ள மெயின் ரோடு வரை ஓடி நின்றது; யாரையும் பிடிக்கவில்லை. கோவிலில் மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயன்றதை தடுத்ததால், காவலாளிகள் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

எஸ்.பி., கண்ணன் கூறியதாவது: கோவில் உண்டியல் திருட்டை தடுக்க முயன்ற போது, இரு காவலாளிகள் கொலை செய்யப்பட்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சிசிடிவி கேமராக்களை சேதப்படுத்தி இருந்தாலும், சில கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகிறோம். ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வருகிறோம். அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தான் இதில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. கொலையாளிகள் விரைவில் கைது செய்யப்படுவர். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us