sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அடுத்த 3 மணி நேரத்தில் டிட்வா புயல் வலுவிழக்கக்கூடும்: வானிலை மையம்

/

அடுத்த 3 மணி நேரத்தில் டிட்வா புயல் வலுவிழக்கக்கூடும்: வானிலை மையம்

அடுத்த 3 மணி நேரத்தில் டிட்வா புயல் வலுவிழக்கக்கூடும்: வானிலை மையம்

அடுத்த 3 மணி நேரத்தில் டிட்வா புயல் வலுவிழக்கக்கூடும்: வானிலை மையம்

9


UPDATED : நவ 30, 2025 05:29 PM

ADDED : நவ 29, 2025 11:48 PM

Google News

9

UPDATED : நவ 30, 2025 05:29 PM ADDED : நவ 29, 2025 11:48 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழகத்தின் வட மாவட்டங்களை நெருங்கும் 'டிட்வா' புயல், அடுத்த 3 மணி நேரத்தில் வலுவிழக்கத் துவங்கும் என்றும், கரையை கடக்க வாய்ப்பு இல்லை என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் இலங்கை அருகே உருவான டிட்வா புயல், தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக, தென் மற்றும் கடலோர மாவட்டங்களில் கன மழை கொட்டித் தீர்க்கிறது. இலங்கை கடலோரப் பகுதிகள் மற்றும் அவற்றை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய டிட்வா புயல், வடக்கு வடமேற்கு திசையில் மணிக்கு 5 கி.மீ., வேகத்தில் நகர்ந்து வருகிறது.

தற்போது சென்னைக்கு 150 கிலோ மீட்டரிலும், புதுச்சேரிக்கு 90 கிலோ மீட்டரிலும், வேதாரண்யத்திற்கு 170 கிலோ மீட்டர் தொலைவிலும் டிட்வா புயல் மையம் கொண்டுள்ளது. இந்த புயல் அடுத்த 3 மணி நேரத்தில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்க வாய்ப்பு உள்ளது. புயலின் நகர்வை கணிக்கும்போது, அது கரையை ஒட்டியே நிலவும்; கரையை கடக்க வாய்ப்பு இல்லை.

'அக்., 1 முதல் நவ., 29 வரையிலான வடகிழக்கு பருவ மழை காலக்கட்டத்தில், 36 செ.மீட்டர் மழை பெய்துள்ளது. இது, இயல்பை விட 3 சதவீதம் அதிகம்' என வானிலை மையம் தெரிவித்துள்ளது.


மீனவர்களுக்கு எச்சரிக்கை


சூறைக்காற்று வீசும் என்பதால், ஆந்திர கடலோரப் பகுதி, தமிழக கடலோரப் பகுதி, மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதி, மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதி, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிக்கு இன்று மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.




மழை பாதிப்பிலிருந்து மக்களை காக்கவும்


டிட்வா புயல் காரணமாக, தமிழகத்தில் அதி கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எத்தகைய அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க, போர்க்கால அடிப்படையில் தி.மு.க., அரசு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து, விழிப்புடன் செயலாற்ற வேண்டும். அதேநேரம், தமிழக மக்களின் துயர் துடைத்து தோள் கொடுக்கும் விதமாக, தமிழக பா.ஜ., சொந்தங்கள் களத்தில் முன்னின்று, மக்களை பாதிப்பிலிருந்து காக்க வேண்டும். * நயினார் நாகேந்திரன், தமிழக பா.ஜ., தலைவர்




13 நிவாரண முகாம்களில் 1,058 பேர் அடைக்கலம்


புயல் எச்சரிக்கையை தொடர்ந்து, 13 நிவாரண முகாம்களில் 1,058 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் தெரிவித்தார். இது குறித்து, அவர் கூறியதாவது: 'புயல் எச்சரிக்கையை தொடர்ந்து, தமிழகத்தில் 13 நிவாரண மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு, 1,058 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு, படுக்கை வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குழந்தைகள் பாதுகாப்புக்கு கூடுதல் கவனம் செலுத்தி வருகிறோம். திடீர் தேவைக்காக, 5 கிலோ அரிசி பாக்கெட்டுகள் ஐந்து லட்சம் வரை தயாராக வைக்கப்பட்டுள்ளன. மழையால், 16 கால்நடைகள் உயிரிழந்துள்ளன; 24 குடிசைகள் சேதமடைந்துள்ளன. அனைத்து பகுதிகளிலும் மீட்புப் படைகள் தயாராக உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.








      Dinamalar
      Follow us