ADDED : டிச 31, 2025 07:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விவசாயிகளின் இன்னல்களை போக்க, கடலோர பகுதிகளில் இறால் பண்ணை தொழில், முறைப்படுத்தப்படும் என தேர்தல் வாக்குறுதியில் சொன்னீங்களே, செஞ்சீங்களா முதல்வர் ஸ்டாலின்?
இந்த வாக்குறுதியை நீங்கள் துாக்கி எறிந்ததால், கடலோர மாவட்டங்களில் சட்ட விரோத இறால் பண்ணைகள் பெருகி, அவற்றில் இருந்து கழிவுநீர் நிலத்தடி நீரோடு கலந்து நீராதாரத்தை சிதைத்து வருகிறது.
இதனால், வயிற்று வலி துவங்கி தோல் வியாதிகள், கிட்னி பாதிப்பு என பல்வேறு நோய்களால் கடலோர மக்களின் எதிர்காலமே நிர்மூலமாகி வருகிறது. விவசாயமும் சீரழிந்து வருகிறது.
- நயினார் நாகேந்திரன், தலைவர், தமிழக பா.ஜ.,

