sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 21, 2025 ,மார்கழி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

திமுக அரசை ஆட்சிக் கட்டிலில் இருந்து விரட்டியடிக்கும் நாள் வெகுதூரமில்லை; சொல்கிறார் நயினார் நாகேந்திரன்

/

திமுக அரசை ஆட்சிக் கட்டிலில் இருந்து விரட்டியடிக்கும் நாள் வெகுதூரமில்லை; சொல்கிறார் நயினார் நாகேந்திரன்

திமுக அரசை ஆட்சிக் கட்டிலில் இருந்து விரட்டியடிக்கும் நாள் வெகுதூரமில்லை; சொல்கிறார் நயினார் நாகேந்திரன்

திமுக அரசை ஆட்சிக் கட்டிலில் இருந்து விரட்டியடிக்கும் நாள் வெகுதூரமில்லை; சொல்கிறார் நயினார் நாகேந்திரன்


ADDED : டிச 21, 2025 08:11 PM

Google News

ADDED : டிச 21, 2025 08:11 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: திமுக அரசை ஆட்சிக் கட்டிலில் இருந்து விரட்டியடிக்கும் நாள் வெகுதூரமில்லை என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை: மதச்சார்பின்மை என்னும் திமுக அரசின் இரட்டைவேடத்திற்கான காலக்கெடு தொடங்கிவிட்டது. கந்தர் மலையில் தீபத்தூணில் தீபமேற்ற அனுமதி மறுத்துவிட்டு, சிக்கந்தர் தர்காவில் சந்தனக்கூடு திருவிழா நடத்த மட்டும் அனுமதித்துள்ள திமுக அரசைக் கேள்விக் கணைகளால் துளைத்தெடுத்துள்ளனர் திருப்பரங்குன்றம் மக்கள்.

நீதிமன்றமே தீபத்தூணில் தீபமேற்றுமாறு உத்தரவிட்ட பின்பும், ஹிந்துக்களின் வழிபாட்டு உரிமையைப் பறித்துவிட்டு, சந்தனக்கூடு திருவிழாவிற்கு மட்டும் முழு ஆர்வத்துடன் அனுமதித்தது திமுக அரசின் மதச்சார்பின்மையைத் தெளிவாக வெளிப்படுத்தியது. அதிலும், சட்டம் ஒழுங்கு சீர்கெடும் என வெற்று சாக்குச் சொல்லி, பால், தண்ணீர் போன்ற அத்தியாவசியப் பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்களைக்கூட மலைமீது அனுமதிக்காமல் திருப்பரங்குன்றம் மக்களை வதைத்துவிட்டு, இன்று தர்காவில் கொடி ஏற்றுவதற்கு மட்டும் அனைவரையும் அனுமதிப்பது தான் திமுக அரசின் சமத்துவமா?

மதச்சார்பின்மை நாடகமாடி, தீபாவளி பண்டிகைக்கு மட்டும் வாழ்த்து கூறாததில் தொடங்கி திருப்பரங்குன்றத்தில் தீபமேற்றுவதற்கு அனுமதி வழங்காதது வரை அப்பட்டமாக ஹிந்து வெறுப்பைக் கக்கும் திமுக அரசுக்கு சவுக்கடி கொடுக்கும் விதமாக, எதிர்குரல் கொடுத்த திருப்பரங்குன்றம் மக்களின் கேள்விகள் வெறும் தொடக்கப்புள்ளியே. போலி மதச்சார்பின்மைவாத குள்ளநரி திமுக அரசை ஆட்சிக் கட்டிலில் இருந்து தமிழக மக்கள் விரட்டியடிக்கும் நாள் வெகுதூரமில்லை. இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us