sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கூவமாக மாறும் தாமிரபரணி ஆறு: ஐகோர்ட் மதுரை கிளை வேதனை

/

கூவமாக மாறும் தாமிரபரணி ஆறு: ஐகோர்ட் மதுரை கிளை வேதனை

கூவமாக மாறும் தாமிரபரணி ஆறு: ஐகோர்ட் மதுரை கிளை வேதனை

கூவமாக மாறும் தாமிரபரணி ஆறு: ஐகோர்ட் மதுரை கிளை வேதனை

5


ADDED : செப் 24, 2024 06:13 PM

Google News

ADDED : செப் 24, 2024 06:13 PM

5


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: '' தாமிரபரணி ஆற்றின் தூய்மையை பாதுகாக்கவில்லை என்றால், அது கூவமாக மாறிவிடும் ,'' என ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரை சேர்ந்த காமராசு என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுவாமிநாதன், பி.புகழேந்தி கூறியதாவது: தாமிரபரணி ஆற்றின் தூய்மையை பாதுகாக்க வேண்டும். இல்லை என்றால், அது கூவமாக மாறும்.

ஆற்றில் கழிவுநீர் கலப்பதை முற்றிலும் தடுக்க வேண்டும். மாநகராட்சி, உள்ளாட்சி அமைப்புகள் மூலம் ஒரு சொட்டு கழிவுநீர் கூட கலக்கக்கூடாது. இதற்கு தேவையான நடவடிக்கைகளை உள்ளாட்சி அமைப்புகள் எடுக்க வேண்டும். கழிவுநீர் கலந்தால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு கோடிக்கணக்கில் அபராதம் விதிக்கப்படும்.

கழிவுநீர் கலப்பதை தடுக்க என்ன வழி என்பது குறித்து பொதுப்பணித்துறையின் நெல்லை நீர்வள ஆதார பொறியாளர் வரும் 26 ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும். தாமிரபரணி ஆற்றின் 84 மண்டலங்கள், படித்துறைகளை யார் பராமரிப்பது, பாதுகாப்பது என்பது குறித்து பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.






      Dinamalar
      Follow us