sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அமைச்சர்களுடன் நடந்த பேச்சு தோல்வி: ஜன., 6 முதல் அரசு ஊழியர், ஆசிரியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

/

அமைச்சர்களுடன் நடந்த பேச்சு தோல்வி: ஜன., 6 முதல் அரசு ஊழியர், ஆசிரியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

அமைச்சர்களுடன் நடந்த பேச்சு தோல்வி: ஜன., 6 முதல் அரசு ஊழியர், ஆசிரியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

அமைச்சர்களுடன் நடந்த பேச்சு தோல்வி: ஜன., 6 முதல் அரசு ஊழியர், ஆசிரியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

6


UPDATED : டிச 22, 2025 07:16 PM

ADDED : டிச 22, 2025 06:48 PM

Google News

6

UPDATED : டிச 22, 2025 07:16 PM ADDED : டிச 22, 2025 06:48 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: அமைச்சர்களுடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், வரும் ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அரசு ஊழியர், ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது.

தொடர் போராட்டம்

'தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும்; அரசு துறைகளில் காலி பணியிடங்கள் நிரப்பப்படும்; ஆசிரியர்களுக்கு உரிய ஊதியம் வழங்கப்படும்' என, கடந்த சட்டசபை தேர்தலின் போது, தற்போதைய ஆளுங்கட்சி தரப்பில் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு பல வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. இவற்றை நம்பி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள், தி.மு.க., வுக்கு ஆதரவு அளித்தன. ஆனால், தி.மு.க., ஆட்சிக்கு வந்து ஐந்து ஆண்டுகள் முடிய உள்ளது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.

Image 1511630சட்டசபை தேர்தல் நெருங்குவதால், அரசு ஊழியர்களின் போராட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், தற்செயல் விடுப்பு என்று தொடர் போராட்டத்தை ஆசிரியர் சங்கத்தினர் செயல்படுத்தி வருகின்றனர்.

தோல்வி

Image 1511631இந்நிலையில் இன்று (டிசம்பர் 22) சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, மகேஷ் ஆகிய 3 பேர் கொண்ட குழுவினர், ஜாக்டோ ஜியோ எனப்படும் அரசு ஊழியர், ஆசிரியர் கூட்டமைப்புடன் பேச்சு நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத காரணத்தினால் தோல்வியில் முடிந்தது.

Image 1511632இதனைத் தொடர்ந்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வரும் ஜனவரி 6 ம் தேதி முதல் திட்டமிட்டபடி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக ஜாக்டோ ஜியோ அமைப்பு அறிவித்துள்ளது.

ஏமாற்றம்

இது தொடர்பாக அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன் கூறியதாவது: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இந்த பேச்சுவார்த்தை ஏமாற்றம் அளித்துள்ளது. திட்டமிட்டபடி ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் துவங்கும். லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இந்த பேச்சுவார்த்தை ஏமாற்றம் அளிக்கிறது.

Image 1511633அமைச்சர்களுடனான பேச்சுவார்த்தையை கருத்து கேட்பு கூட்டமாக மாற்றியது கண்டிக்கத்தக்கது. கடந்த காலங்களில் தீபாவளி பண்டிகை அன்று சிறையில் இருந்த வரலாறு அரசு ஊழியர்களுக்கு உண்டு. பொங்கல் பண்டிகை நெருங்கும்போது கைது செய்தாலும் பரவாயில்லை. கடந்த 4 முறை பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போது கூறியதையே தற்போதும் அமைச்சர் வேலு கூறுகிறார். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us