sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 23, 2025 ,புரட்டாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பெண்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் மாணவியரும் பயனடைய அறிவுறுத்தல்

/

பெண்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் மாணவியரும் பயனடைய அறிவுறுத்தல்

பெண்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் மாணவியரும் பயனடைய அறிவுறுத்தல்

பெண்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் மாணவியரும் பயனடைய அறிவுறுத்தல்


ADDED : செப் 19, 2025 03:31 AM

Google News

ADDED : செப் 19, 2025 03:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:பிரதமர் மோடியின், 75வது பிறந்த நாளையொட்டி, நாடு முழுதும், 'ஸ்வஸ்த் நாரி, சஷக்த் பரிவார் அபியான்' என்ற தலைப்பில், பெண்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம், மத்திய அரசு சார்பில் அக்டோபர் 2 வரை நடத்தப்பட உள்ளது.

இம்முகாம்களில், பெண்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் பாதிப்பு பரிசோதனை, மார்பக புற்றுநோய், வாய் புற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய், ரத்தசோகை காசநோய் பரிசோதனை, மலைப்பகுதி பெண்களுக்கு, 'அரிவாள் செல் நோய்' பரிசோதனை போன்றவை மேற்கொள்ளப்பட உள்ளன. மேலும், மாதவிடாய் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. ரத்ததான முகாம்கள் நடத்தி, ஒரு லட்சம் யூனிட் ரத்தம் சேகரிக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

எனவே, உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவியரும், இந்த சிறப்பு மருத்துவ முகாம்களில் பங்கேற்று பயனடைய, யு.ஜி.சி. அறிவுறுத்தி உள்ளது. மேலும், மாணவர்கள் ரத்ததானம் செய்ய ஊக்கப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us