sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

எஸ்.ஐ., பதவி உயர்வு; அன்புமணி வலியுறுத்தல்

/

எஸ்.ஐ., பதவி உயர்வு; அன்புமணி வலியுறுத்தல்

எஸ்.ஐ., பதவி உயர்வு; அன்புமணி வலியுறுத்தல்

எஸ்.ஐ., பதவி உயர்வு; அன்புமணி வலியுறுத்தல்


ADDED : பிப் 19, 2024 05:01 AM

Google News

ADDED : பிப் 19, 2024 05:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : 'சட்டசபை பட்ஜெட் கூட்டத்தில், 20 ஆண்டுகள் பணியாற்றிய காவலர்களுக்கு எஸ்.ஐ., பதவி உயர்வு வழங்கும் அறிவிப்பை அரசு வெளியிட வேண்டும்' என, பா.ம.க., தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

அவரது அறிக்கை:


தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையில், இரண்டாம் நிலை காவலர்களாக பணியில் சேருவோருக்கு, 7 ஆண்டுகளில் முதல்நிலை காவலர் பதவி வழங்கப்படும்; பத்தாண்டுகளில் தலைமை காவலர்களாகவும், 20 ஆண்டுகளில் சிறப்பு எஸ்.ஐ.,க்களாகவும் பதவி உயர்வு வழங்கப்படும் என, உறுதிஅளிக்கப்பட்டு இருந்தது.

தி.மு.க., ஆட்சிக்கு வந்துவிட்ட நிலையில், பல்வேறு நிலைகளில் காவலர்களாக பணியாற்றி வந்தவர்கள், தங்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் என, எதிர்பார்த்தனர்.

ஆனால், இன்று வரை பதவி உயர்வு குறித்த, அவர்களின் எதிர்பார்ப்பை அரசு நிறைவேற்றவில்லை. எனவே, இந்த வாக்குறுதியை நிறைவேற்றினால், 15,000 பேருக்கு சிறப்பு எஸ்.ஐ., பதவி உயர்வு கிடைக்கும்.

சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்படவிருக்கும் நிதிநிலை அறிக்கையில், காவலர்களுக்கு காலம் சார்ந்த பதவி உயர்வு வழங்குவது குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டும். இவ்வாறு அன்புமணி கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us