sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 20, 2025 ,புரட்டாசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஆயுத பூஜை, தீபாவளியை முன்னிட்டு சிறப்பு ரயில்கள்; இன்று முன்பதிவு துவக்கம்

/

ஆயுத பூஜை, தீபாவளியை முன்னிட்டு சிறப்பு ரயில்கள்; இன்று முன்பதிவு துவக்கம்

ஆயுத பூஜை, தீபாவளியை முன்னிட்டு சிறப்பு ரயில்கள்; இன்று முன்பதிவு துவக்கம்

ஆயுத பூஜை, தீபாவளியை முன்னிட்டு சிறப்பு ரயில்கள்; இன்று முன்பதிவு துவக்கம்

5


ADDED : செப் 17, 2025 07:39 AM

Google News

ADDED : செப் 17, 2025 07:39 AM

5


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து திருநெல்வேலி, நாகர்கோவில், செங்கோட்டை, துாத்துக்குடிக்கு, சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

நாகர்கோவில் - தாம்பரம் செப். 28 முதல் அக். 26 வரை ஞாயிறு தோறும் இரவு 11:15 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (06012), மறுநாள் மதியம் 12:30 மணிக்கு தாம்பரம் செல்கிறது. மறுமார்க்கத்தில், செப். 29 முதல் அக். 27 வரை திங்கள் தோறும் மதியம் 3:30 மணிக்கு புறப்படும் ரயில் (06011), மறுநாள் அதிகாலை 5:15 மணிக்கு நாகர்கோவில் செல்கிறது.

இரு ரயில்களும் வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்துார், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சை, மயிலாடுதுறை, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூர், பண்ருட்டி, விழுப்புரம், மேல்மருவத்துார், செங்கல்பட்டு வழியாக செல்கின்றன. 2 'ஏசி' இரண்டடுக்கு படுக்கை வசதிப் பெட்டி, 6 'ஏசி' மூன்றடுக்கு படுக்கை வசதிப் பெட்டிகள், 7 'ஸ்லீப்பர்' பெட்டிகள், 4 பொதுப் பெட்டிகள், ஒரு சரக்குப் பெட்டி, ஒரு மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்டியுடன் இயக்கப்படுகின்றன.

செங்கோட்டை - சென்னை சென்ட்ரல் செப். 24 முதல் அக். 22 வரை புதன் தோறும் மதியம் 3:10 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் ரயில் (06121), மறுநாள் காலை 6:30 மணிக்கு செங்கோட்டை செல்கிறது. மறுமார்க்கத்தில், செப். 25 முதல் அக். 23 வரை வியாழன் தோறும் இரவு 9:00 மணிக்கு புறப்படும் ரயில் (06122), மறுநாள் காலை 11:30 மணிக்கு சென்னை சென்ட்ரல் செல்கிறது.

இரு ரயில்களும் தென்காசி, அம்பாசமுத்திரம், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்துார், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் வழியாக செல்கின்றன. 15 'ஏசி' மூன்றடுக்கு 'எகனாமி' படுக்கை வசதிப் பெட்டிகள், 2 சரக்குப் பெட்டிகளுடன் இயக்கப்படுகின்றன.

திருநெல்வேலி - சென்னை எழும்பூர் செப். 25 முதல் அக். 23 வரை வியாழன் தோறும் இரவு 9:30 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்படும் ரயில் (06070), மறுநாள் காலை 10:00 மணிக்கு எழும்பூர் செல்கிறது. மறுமார்க்கத்தில், செப். 26 முதல் அக். 24 வரை வெள்ளி தோறும் மதியம் 12:30 மணிக்கு புறப்படும் ரயில் (06069), மறுநாள் அதிகாலை 1:30 மணிக்கு திருநெல்வேலி செல்கிறது.

இரு ரயில்களும் கோவில்பட்டி, சாத்துார், விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, தேவகோட்டை ரோடு, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலுார், விருத்தாச்சலம், விழுப்புரம், மேல்மருவத்துார், செங்கல்பட்டு, தாம்பரம் வழியாக செல்கிறது. ஒரு 'ஏசி' இரண்டடுக்கு படுக்கை வசதிப் பெட்டி, 6 'ஏசி' மூன்றடுக்கு படுக்கை வசதிப் பெட்டிகள், 2 'ஏசி' மூன்றடுக்கு 'எகனாமி' படுக்கை வசதிப் பெட்டிகள், 7 'ஸ்லீப்பர்' பெட்டிகள், 4 பொதுப் பெட்டிகள், ஒரு சரக்குப் பெட்டி, ஒரு மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்டியுடன் இயக்கப்படுகின்றன.

துாத்துக்குடி - சென்னை எழும்பூர் செப். 29 முதல் அக். 27 வரை திங்கள் தோறும் இரவு 11:15 மணிக்கு துாத்துக்குடியில் இருந்து புறப்படும் ரயில் (06018), மறுநாள் காலை 10:45 மணிக்கு எழும்பூர் செல்கிறது. மறுமார்க்கத்தில், செப். 30 முதல் அக். 28 வரை செவ்வாய் தோறும் மதியம் 12:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06017), அன்றிரவு 11:15 மணிக்கு துாத்துக்குடி செல்கிறது.

இரு ரயில்களும் கோவில்பட்டி, சாத்துார், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலுார், விருத்தாச்சலம், விழுப்புரம், மேல்மருவத்துார், செங்கல்பட்டு, தாம்பரம் வழியாக செல்கிறது. ஒரு 'ஏசி' இரண்டடுக்கு படுக்கை வசதிப் பெட்டி, 2 'ஏசி' மூன்றடுக்கு படுக்கை வசதிப் பெட்டிகள், 9 'ஸ்லீப்பர்' பெட்டிகள், 4 பொதுப் பெட்டிகள், 2 மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்டிகளுடன் இயக்கப்படுகின்றன.

நாகர்கோவில் - சென்னை சென்ட்ரல் செப். 30 முதல் அக். 28 வரை செவ்வாய் தோறும் காலை 9:15 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்படும் ரயில் (06054), அன்றிரவு 11:30 மணிக்கு சென்னை சென்ட்ரல் செல்கிறது. மறுமார்க்கத்தில், அக். 1 முதல் 29 வரை புதன் தோறும் அதிகாலை 4:15 மணிக்கு புறப்படும் ரயில் (06053), அன்றிரவு 8:30 மணிக்கு நாகர்கோவில் செல்கிறது.

இரு ரயில்களும் வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்துார், விருதுநகர், மதுரை, கொடை ரோடு, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூர் வழியாக செல்கின்றன. ஒரு 'ஏசி' இரண்டடுக்கு படுக்கை வசதிப் பெட்டி, 5 'ஏசி' மூன்றடுக்கு படுக்கை வசதிப் பெட்டிகள், 11 'ஸ்லீப்பர்' பெட்டிகள், 4 பொதுப் பெட்டிகள், 2 மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்டிகளுடன் இயக்கப்படுகின்றன. மேற்கண்ட ரயில்களுக்கான முன்பதிவு இன்று (செப். 17) காலை 8:00 மணிக்கு துவங்குகிறது.

20 பெட்டிகளுடன் 'வந்தே பாரத்'

திருநெல்வேலி - சென்னை எழும்பூர் இடையே 2023 செப். 24 முதல் 'வந்தே பாரத்' ரயில் (20665/20666) இயக்கப்பட்டு வருகிறது. செவ்வாய் தவிர்த்து தினமும் காலை 6:05 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு மதுரை வழியாக மதியம் 1:55 மணிக்கு எழும்பூர் செல்கிறது. மறுமார்க்கத்தில், மதியம் 2:45 மணிக்கு புறப்பட்டு இரவு 10:30 மணிக்கு திருநெல்வேலி செல்கிறது.

8 பெட்டிகளுடன் இயங்கிய இந்த ரயில் இந்தாண்டு ஜன., 15 முதல் 16 பெட்டிகளுடன் இயக்கப்பட்டு வருகிறது. ரயில் துவங்கப்பட்டு 2 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையிலும், பண்டிகை காலத்தை முன்னிட்டும், பயணிகள் வசதிக்காக செப். 24 முதல் 20 பெட்டிகள் கொண்ட ரயிலாக இது இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us