sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஜன.14ல் மத நல்லிணக்க பிரசார யாத்திரை துவக்கம்: வி.எச்.பி., தேசிய தலைவர் பேட்டி

/

ஜன.14ல் மத நல்லிணக்க பிரசார யாத்திரை துவக்கம்: வி.எச்.பி., தேசிய தலைவர் பேட்டி

ஜன.14ல் மத நல்லிணக்க பிரசார யாத்திரை துவக்கம்: வி.எச்.பி., தேசிய தலைவர் பேட்டி

ஜன.14ல் மத நல்லிணக்க பிரசார யாத்திரை துவக்கம்: வி.எச்.பி., தேசிய தலைவர் பேட்டி


ADDED : நவ 23, 2024 02:37 AM

Google News

ADDED : நவ 23, 2024 02:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி:''மதநல்லிணக்க பிரச்சார யாத்திரை வரும் ஜன., 14ல் துவங்கி 22 வரை நாடு முழுவதும் நடக்கிறது,'' என, திருச்சியில் விஷ்வ ஹிந்து பரிஷத் தேசிய தலைவர் அலோக்குமார் கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து, 40 மூத்த துறவிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். தமிழக அரசு, இந்து கோவில்களையும், அதன் சொத்துக்களையும் இந்து சமுதாயத்திடம் திரும்ப ஒப்படைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியில், சதியால் கோவில் சொத்துக்கள் அரசாங்கத்தால் எடுக்கப்பட்டன. சுதந்திரத்திற்குப் பிறகும் அது தொடர்ந்தது. சுதந்திரத்தின் போது, கோவில்கள் மொத்த வருவாயில், 3% நிர்வாகச் செலவுக்காக அரசுக்கு வழங்க வேண்டும் என்று சட்டம் இருந்தது. தற்போது, இது, 12 சதவீதமாக உயர்ந்துள்ளது. கூடுதலாக, அவர்கள் தணிக்கை கட்டணம் வசூலிக்கின்றனர். மேலும், எங்கு தலைமை நிர்வாக அதிகாரியை நியமித்தாலும், அவரது சம்பளம் மற்றும் இதர செலவுகளும் கோவிலின் நிதியில் இருந்து செலுத்தப்படுகிறது. இது மிகவும் வருந்தத்தக்க நிலை. இந்து கோவில்களை மீண்டும் இந்து சமுதாயத்திற்கு வழங்க வேண்டும். விஷ்வ ஹிந்து பரிஷத் இந்த கோரிக்கையை வலியுறுத்தி, நாடு தழுவிய போராட்டத்தை, ஜன.,5ம் தேதி முதல் நடத்தவுள்ளது. ஜனவரி 5ம் தேதி விஜயவாடாவில் மாபெரும் பொதுக்கூட்டம் நடத்தவுள்ளோம். மேலும், ஆந்திர அரசு கோவில்களை திரும்பக் கொடுக்க வேண்டும், என்று அழுத்தம் கொடுத்தால், அது நாட்டின் பிற பகுதிகளிலும் பின்பற்றப்படும். கோவில்கள் அனைவருக்கும் திறக்கப்பட வேண்டும் என்பதை, ஒவ்வொரு கிராமத்திலும் வலியுறுத்தி வருகிறோம்.

நீர் ஆதாரங்களும், சுடுகாடும் பொதுவானதாக இருக்க வேண்டும். அதில் உயர்ந்தது, தாழ்ந்தது என்ற வேறுபாடாக இருக்கக் கூடாது. இந்த மத நல்லிணக்கக் கருத்தைப் பிரச்சாரம் செய்வதற்காக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்கள் உட்பட, நாடு முழுவதும் ஜன., 14ம் தேதி முதல், ஜன., 22 வரை யாத்திரைகளை நடத்த முடிவு செய்துள்ளோம். இந்த யாத்திரை, புனிதர்களை பக்தர்களின் வீட்டு வாசலுக்கு அழைத்துச் செல்லும்.

இங்கு, ஆதீனம் ஒருவரைப் பற்றி சில சர்ச்சைகள் இருப்பதாகச் சொல்கின்றனர். யாரோ ஒருவர் பாரம்பரியத்தை மீறி திருமணம் செய்து கொண்டார். இதைத் தீர்க்க, தமிழக அரசு ஒரு கூட்டத்தைக் கூட்டியுள்ளது. இது, அரசாங்கத்தின் வேலை அல்ல.

அமைச்சர் முன்னிலையில், டெங்கு, மலேரியா போல் சனாதனத்தை அழிப்போம் என்று அறிவிக்கப்பட்டது. அறநிலையத்துறை அமைச்சர் அங்கே அமர்ந்து அதைக் கேட்டுக் கொண்டிருந்தார். அந்த நபர்களும், அந்த அமைச்சர்களும், அந்த அரசாங்கமும், எந்த மீறல்களையும் தீர்ப்பதில் எந்தப் பங்கும் வகிக்க முடியாது. ஆதீனம் தான் முடிவு செய்ய வேண்டும், ஆதீனம் முடிவு செய்யும் போது, வி.எச்.பி.,யும் அதையே பின்பற்றும்.

இங்கிருந்து, 12 கி.மீ., தொலைவில் உள்ள, 1,500 ஆண்டுகள் பழமையான இந்து கோவிலை, வக்பு வாரிய சொத்து என்று வக்பு வாரியம் முடிவு செய்து அறிவித்தது. இது அராஜகம். வக்புக்கு மத்திய அரசு கொண்டு வந்துள்ள திருத்தங்களை ஆதரிப்பதோடு, வக்பு தலைமையின் கீழ், முஸ்லிம்களுக்கு சில சிறப்பு அதிகாரங்கள் வழங்கப்பட்டால், அதை பிற மதத்தினருக்கும் பரிசீலிக்க வேண்டும்.

எனவே, வக்பு வாரிய திருத்தங்களை நாங்கள் ஆதரிக்கிறோம், எந்த வடிவம் வந்தாலும், மற்ற எல்லா மதங்களுக்கும் குறைந்தபட்சம் ஒரே மாதிரியான அதிகாரங்களை நாங்கள் ஆதரிக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us