sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 15, 2025 ,கார்த்திகை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ராமேஸ்வரம் மீனவர்கள் 15 கி.மீ., நடந்து போராட்டம்

/

ராமேஸ்வரம் மீனவர்கள் 15 கி.மீ., நடந்து போராட்டம்

ராமேஸ்வரம் மீனவர்கள் 15 கி.மீ., நடந்து போராட்டம்

ராமேஸ்வரம் மீனவர்கள் 15 கி.மீ., நடந்து போராட்டம்


UPDATED : பிப் 21, 2024 08:34 AM

ADDED : பிப் 21, 2024 06:08 AM

Google News

UPDATED : பிப் 21, 2024 08:34 AM ADDED : பிப் 21, 2024 06:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம் : இலங்கையில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்கக் கோரி, ராமேஸ்வரம் மீனவர்கள் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் வரை, 50 கி.மீ., நடைபயணம் புறப்பட்டனர். 15 கி.மீ., சென்ற நிலையில் கலெக்டர் விஷ்ணுசந்திரன் நடத்திய சமரச பேச்சால் நடைபயணத்தை ஒத்தி வைத்தனர்.

கடந்த 2ல், ராமேஸ்வரம் மீனவர்கள் நால்வருக்கு 6 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை இலங்கை நீதிமன்றம் சிறை தண்டனை விதித்தது.

இவர்களை விடுவிக்கக் கோரி, ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டையை ராமநாதபுரம் கலெக்டரிடம் ஒப்படைக்க மீனவர்கள் முடிவு செய்தனர்.

இதற்காக நேற்று ராமேஸ்வரத்தில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் நடை பயணம் புறப்பட்டனர். 15 கி.மீ., கடந்து பாம்பன் அக்காள்மடம் சென்ற போது கலெக்டர் விஷ்ணுசந்திரன், எஸ்.பி., சந்தீஷ் மீனவர்களை அழைத்து சமரசம் பேசினர்.

'மீனவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கிறது. விரைவில் மீனவர்கள் விடுவிக்கப்படுவர்' என கலெக்டர் தெரிவித்தார். இதையடுத்து போராட்டத்தை மீனவர்கள் ஒத்திவைத்தனர்.






      Dinamalar
      Follow us